சிகை அலங்கார நிலையத்தில் முதியவர் சடலமாக மீட்பு!📸
3 நாட்களுக்கு மேலாக இறந்து, கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில் சடலத்தை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தியிலுள்ள சிகையலங்கார கடையொன்றில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று (15) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் என்பதுடன், உயிரிழந்தவர் வாடகைக்கடையில் சிகையலங்கார கடை நடத்தி வந்தவர் என்பதுடன் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரைச்சேர்ந்தவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் வேலையின் நிமித்தம் சிகையலங்கார கடை வேலைகளை முடித்து கடையறைக்குள் இரவு தூக்கத்தைக்கழிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் மூன்று நாட்களுக்குப்பிறகு இச்சம்பவம் தெரிய வந்துள்ளதுடன், கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை