வாழ்துக்கள் மருதடிப் பிள்ளையார் அறங்காவலர்கள்.!


யாழ். மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் அறங்காவலர் சபையின் போற்றத்தக்க பணி தர்மத்தை பரிபாலனம் செய்பவர்களே ஆலய அறங்காவலர் சபையினர். அது பல ஆலயங்களில் பெயரளவிலேயே இருக்கிறது.


வான் உயர் கோபுரமும் கட்டி வெடி கொழுத்தும் திருவிழாவும் செய்து இரவு நூடுல்ஸ் உம் கொடுத்தால் தான் சிறந்த பரிபாலனம் என்ற பகட்டுப்போர்வைக்குள்ளே பல ஆலயங்கள் உள்ளன.


ஆலயம் என்பது அது சார்ந்த குடிகளை ஆன்மீகத்தில் மட்டுமல்ல வாழ்வியலிலும் உயர்த்த வேண்டும்.


அதை சிரமேற்கொண்டு மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் அறங்காவலர்சபையின் பல பணிகள் போற்றுதலுக்குரியன.


அவற்றுள் இது மிகப்பெரிய சிவப்பணியாகும்.

கண்ணுக்கு ஒளி கொடுத்தோர் தெய்வத்தைப்போன்றோரே.


மருதடிவிநாயகர் ஆலய தர்மகர்த்தாசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மருத்துவமுகாமில் தெரிவுசெய்யப்பட்ட 7 பேருக்கு கண் அறுவை சிகிச்சைகள் இலவசமாக நடைபெற்றது.


சிவபெருமான் கருணையால் நல்ல மனிதம் மிக்க அறப்பணிகள் மேலும் சிறக்கட்டும்.

அடியார்கள் பாதம் பணிகிறேன்.


இதே போன்ற பணிகளை அனைத்து ஆலயங்களும் சிறிய அளவிலேனும் ஆரம்பித்தல் வேண்டும்.


அதனால் தான் மதமாற்றங்களுக்கு முடிவுகட்டலாம்


திருச்சிற்றம்பலம் 

சிவாசாரியார் அகோரசிவம் உமையரசு



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.