இந்தியாவும் பிரான்சும் போர்விமானங்கள் வாங்குவதில் ஒப்பந்த கையெழுத்திடல்!📸
இந்திய கடற்படைக்காக 22 ஒற்றை இருக்கைகள் மற்றும் நான்கு இரட்டை இருக்கைகள் கொண்ட 26 ரபேல்-எம் விமானங்களை வாங்குவதற்காக இந்தியாவும் பிரான்சும் இன்று திங்கட்கிழமை இரு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்தியா, பிரான்ஸ் இடையே 2016 ஆம் ஆண்டு ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி பிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தது. இந்த சூழலில், பிரான்சிடமிருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது. இந்த போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இன்றைய ஒப்பந்தத்தில்; 26 ரபேல் விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிக்கும்.
India and France sign ₹63,000 crore deal for 26 Rafale Marine fighter jets. PM Modi was in HIGH LEVEL meeting with Defence Minister, NSA and CDS
கருத்துகள் இல்லை