மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு. !


வீதி விபத்தில் ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை செப்டம்பர் 25 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டார்.


சந்தேக நபரான பாராளுமன்ற உறுப்பினர், 2021மார்ச் 22, அன்று பேஸ்லைன் வீதியில் ஒரு கார் விபத்தை ஏற்படுத்தி, வாகனத்தில் இருந்தவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக கிராண்ட்பாஸ் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபரான அர்ச்சுனா இராமநாதனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.


 மேலும் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் லசந்த அபேவர்தன நீதிமன்றத்தில் நேற்று (22) செவ்வாய்க்கிழமை சாட்சியமளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.