ஈயத்தீ (கோபிகை ) - பாகம் 53!!



நகரின் பரபரப்பான சூழலைக் கடந்து ஒரு அமைதியான இடத்தில் அமைந்திருந்தது அந்த இராணுவ காவல்நிலையம். வெளியே இரண்டு சீருடை அணிந்த இராணுவத்தினர் காவவரணில் துப்பாக்கிகளை ஏந்தியபடி நின்றனர்.


நான் , சீலன் அண்ணா, பிள்ளைகள் இருவருமாக உள்ளே செல்லவும் 

தமிழ் இராணுவத்தினன் . ஒருவன் அருகில் வந்து,

"என்ன விசயம் ?"  என்றான்.

பதில் சொல்வ எத்தனித்த போதும் என்னால் எதுவும் பேசமுடியவில்லை....வார்த்தைகள் அடைத்துக் கொண்டன. ஏதோ ஒரு பெருங் குகைக்குள் அகப்பட்டு விட்டது போல மனம் உணர்ந்தது.  இதயம் பாரமாகிக் கனத்தது. 

மித்திரன... மித்திரன்... மனதிற்குள் மட்டும்தான் இந்த வார்த்தைகள் தொடர்ந்து ஒலித்தன.

பிள்ளைகள் இருவரினதும் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன். 


கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது.

சீலன் அண்ணா என்னைப் பார்த்து தலையை ஆட்டி, என்னை ஆறுதல் படுத்திவிட்டு விபரத்தைச் சொன்னார்.


"ஓ... என்ன பேர்?"

"தேவமித்திரன்"

தலையை ஆட்டிவிட்டு வேகமாக உள்ளே சென்றுவிட்டான். 

அண்ணா.... கேவலும் அழுகையுமாக சீலன் அண்ணாவைப் பார்ததேன். 

மிரண்டு போன பிள்ளைகள் இருவரும் என்னுடைய முகத்தையே பார்க்க, 

"இவையளை வீட்ட விட்டிட்டு வந்திருக்கலாம். ".

இல்லை அண்ணா.... எங்களுக்கு நடக்கிற அநீதிகளும் அவலங்களும் எங்கட பிள்ளையளுக்குத் தெரிய வேணும்...நாங்கள் செய்யிற பெரிய பிழையே இதுதான்....

எங்கட வரலாறுகளை பிள்ளைகளுக்குச் சொல்லாமல்விடுறம்... அவையளுக்கு எஙகட இனத்துககான தேவை புரியேல்லை, அதனாலைதான் தேவையற்ற வழிகளிலை நேரத்தையும் வாழ்க்கையையும் செலவழிக்கினம்...

காலம் அவையளில குறைகளைச் சொல்லுது..."  என்றேன் ஏதோ ஓரு வேகத்தில்.

அது சரிதான் சமர்... " எனறார் சீலன் அண்ணா.

நாங்கள் சில மணிததுளிகள் அங்கேயே நின்றோம். 

யாரும் எதுவும் கேட்கவில்லை.

எனக்கு ஏதோ தவறாகப்பட்டது மனதில். 

உடனடியாக 

வாங்கோ அண்ணா என்றுவிட்டு அவர்களின அலுவலக முகப்புக்குச் சென்று உள்ளே விரைந்தேன். 

முன் இருக்கேயில் இருந்த சிங்கள இராணுவத்தினன் 

அமருமாறு சைகை செய்யவும் மற்றவர்களை இருக்கச் சொல்லிவிட்டு நான் அப்படியே நின்று கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் வாகனம் ஒன்று வெளியே எடுக்கப்படுவது தெரிந்தது. 

கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் காலை ஆறு முப்பது.

ஏதேச்சையாக உள்ளே பார்த்த போது தேவமிததிரன் நடுவிலும் முன்னும பின்னுமாக இருவருமாக அழைத்துச் செல்வது தெரிந்தது. 

என் மூளையில் மின்னலாய் வந்து போனது அப்பாவின் மரணம்.

'கொடூர பாவிகள்... கொனறு விட்டார்களே...என்னை இப்படி நிர்க்கதியாக்கிவிடாடார்களே...' 

அம்மாவின் ஓலம் செவிப்பறையில் வந்து மோதியது. 


எப்படித்தான் எனக்கு அவ்வளவு பலம் வந்ததோ தெரியவில்லை....

உள்ளே செல்லமுடியாது என்பது தெரிந்ததும் பாய்ந்து கொண்டு வெளியே ஓடினேன்.

என்னுடைய செய்கையால் அதிர்ச்சி அடைந்த சீலன் அண்ணா பிள்ளைகளைக் கையில் பிடித்துக்கொட்டு பின்னாலேயே ஓடி வந்தார். 

நான் ஓடிப்போதற்குள் பின் வழியாக கூட்டிசசென்ற தேவமித்திரனை வாகனத்தில் ஏற்றிவிட்டார்கள்..

ஓடிச் சென்று வாகனத்தை மறித்து நின்று கொண்டேன். வியப்பும் அதிர்ச்சியுமாகப பார்த்த அந்த வாகனச் சாரதி,

"எயா கை டமனவா... " (தளளிப்போ) 

எனறு கத்தினான்.

வெள்ளை வெளேரென்ற நிறத்தில் நீண்ட முகமும் உருண்டைக் கண்களும் பெரிய உதடுகளுமாக ஒரு மாறுபட்ட தோற்றததில் இருந்த அவனுடைய கத்தல் ஒருநொடி எனக்குள் பயத்தைக் கிளறினாலும் 

' பயந்தால் சரிவராது சமர்... துணிந்து நில்... இல்லையேல் உன் தேவமித்திரனை இழந்து விடுவாய் ' என்று ஒரு குரல் உள்ளிருந்து எச்சரிக்க, அப்படியே சிலை போல நின்றேன்.

உடனே... ஓடி வந்த பெரிய  அதிகாரி 

என்ன வேணும்? என்று சிங்களத்தில் வினவினான்.

நான், '"உள்ளே என் கணவர் இருக்கிறார், அவரைப் பார்க்க வேண்டும்"" என்று ஆங்கிலத்தில் கூறினேன். 

அவசரத்திலும் பரபரப்பிலும் அந்த அதிகாரி, 

' அப்படி யாரும் இல்லை'  என்று கூறிவிட 

எனது சந்தேகம் உறுதியானது. 

"இருக்கிறார்... நான் பார்த்தேன்... வாகனத்தை திறவுங்கள்"  என்று சத்தமாகவே கூறினேன்.


 அவரைக்காட்ட அவர்கள் விரும்பவில்லை  என்பது தெளிவாகப்புரிந்தது.

நானும் விடுவதாக இல்லை.

முடிந்தவரை வாதாடிக்கொண்டிருநதேன்.


'அவருடைய குற்றம் என்ன... அதைச்சொல்லவேண்டியது உங்களுடைய கடமை'  என்று சத்தமாகச் சொன்னேன்.

மீண்டும் அவர்கள் வாகனத்தை எடுக்க முயற்சிக்கவும் நான் வாகனத்தை மறித்தபடி நடுவில் நின்றுகொண்டே, 

நான் ஒரு வைத்தியர் என்கிற அத்தட்சியை அவர்களிடம் காண்பித்தேன்.


எதுவும் செய்ய முடியாத அந்த அதிகாரி மடாரென்று உள்ளே செல்லவும் பாய்ந்து சென்று வாகனத்தின் கதவைத்திறக்க முயற்சி செய்தேன்.

முடியவில்லை...

ஓடிவந்து என்னைத் தடுக்க முயற்சித்த இராணுவத்தினன் ஒருவனின் கை என்மீது பட முன்பே தட்டிவிட்ட சீலன் அண்ணா, கடுங் கோபமாக முறைக்கவும் படார் என்று கதவு திறந்து தேவமித்திரன் வெளியே வரவும் சரியாக இருந்தது. 


அவருடைய முகத்தில் அப்படி ஒரு கோபத்தை இதற்கு முன்பு நான் பார்க்கவே இல்லை. 

தன்னுடையதை,  தனக்கானதைப் பாதுகாக்கத்துடிக்கும் பருந்தின் உக்கிரத்தோடு நின்றவரை அப்படியே பார்த்தபடி நின்றேன்.


'என் கண்முன்னே அவர் நிற்கிறார்' என்பதில் ஒரு ஆசுவாசம் ஏற்பட்டது.


உள்ளே போன அதிகாரி திரும்ப ஓடிவந்து அந்தச் சாரதியிடம் ஏதோ கேட்கவும் அவன் என்னைப்பார்ததபடி சிங்களத்தில் ஏதோ கூறினான்.

நான் எதையும் பொருட்படுத்தாமல் தேவமித்திரனின் முழங்கையை இறுகப்பற்றியவாறு நின்றுகொண்டிருந்தேன்.

நான் அவரை அவ்வாறு பிடித்துக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

ஒன்று, 

 அந்தச் சாரதியை அவர் தாக்கிவிடக்கூடாது என்பது. 

இரண்டாவது,

அவரை விட்டுவிடக்கூடாது... வேண்டும் என்றால் என்னையும் சேர்த்தே ஏற்றிச் செல்லட்டும் என்பது...


இதற்கியையில் சீலன் அண்ணா அலைபேசியில் குறுந்தகவல் அனுப்பிவிட்டதால் ஒரிருவராக பல்கலைக்கழக மாணவர்களும் தேவமித்திரனின் நணபர்களும் வரத்தொடங்கிவிட்டனர்.


ஆட்கள் வரவர எதுவும் செய்ய முடியாமல் 

அவரை மீண்டும் உள்ளே அழைத்துச் செல்ல முற்படவும் சீலன் அண்ணா தடுத்து விட்டார்.


எல்லோருமாகச் சேர்த்து வெளி வராந்தாவில்தான் இருக்கவைக்க வேண்டும் எனறு கூச்சல் போடவும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.


சிறிது நேரத்தில் மேகவர்ணன் அண்ணா, .அவரோடு நின்றவர்கள், பார்கவி, இனியன் என ஏல்லோரும் வந்து சேரந்து விட்டனர்.

ஓடிவந்த பார்கவி வெலவெலத்துப்போய் அழுதபடி சீலன் அண்ணாவோடு ஒண்டியபடி நின்ற அகரனையும் வண்ணமதியையும் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டது எனது ஒரப்பார்வையில் தெரிந்தது. 


சில மணிநேர வாக்குவாதத்தின் பின்னர் 

'முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை ஒழுங்கமைத்ததாக' குற்றம் கூறப்பட்டது.


 நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தீர்ப்பு வழங்குமாறு நாங்கள் கேட்டதும் வேறு வழியின்றி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தேவமித்திரனின் நண்பி ஒருவர்தான் அவருக்காக வாதாடினார்.

நீதிமன்ற வளாகமே மககள் கூட்டத்தால் நிறைந்து வழிந்தது. ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு ஆழ்ந்த அமைதி நிலவியது. சற்று தள்ளி நட்பர்களோடு நின்ற தேவமித்திரன் அடிக்கடி என்னைப் பார்த்துக்கொண்டார். 

அந்தப் பார்வையில் இருந்தது அதீத காதலா, நன்றி அறிவிப்பா, புரிதலின் வெளிப்பாடா என்பதை என்னால் உணர முடியவில்லை.


மாலை மூன்று மணியளவில வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 


'இறந்தவர்களை நினைவு கூருவது எங்களின் தார்மீக கடமை என்றும் அதை யாரும் தடுக்க முடியாது'  என்றும் தீர்ப்பு வழஙாகப்பட்டது. 

அதன்படி

தேவமித்திரன் விடுதலை செய்யப்பட்டார்.

அன்யைய நாள் தேவமித்திரன் விடுதலை செய்யப்பட்ட நாளாக மட்டும் தெரியவில்லை எனக்கு. அராஜகத்திற்கு எதிராக மககள் ஒன்றுகூடி சட்டத்தின் முன்னால் கொதித்தெழுகிற போது நீதி கிட்டும்' என்கிற உண்மை புலப்பட்ட நாளாகவுமே தோன்றியது.


தொடரும்....








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.