ஈரத்தீ (கோபிகை ) - பாகம் 54
அன்றைய நாள், இரவு எனனும் தடிமனான கரிய போர்வையைப் போர்த்திக்கொண்டு அமைதியாகிவிட்டிருந்தது.
அநேகமானவர்கள் எங்களோடு கூடவே வீட்டுக்கு வந்து விட்டே பின்னர் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டனர்.
பாமதி அக்கா இனியனோடு சேர்த்து அகரன் வண்ணமதியையும் தன்னுடைய வீட்டுக்கு கூட்டிச் செனறு விட்டா.
இந்தக் கலவரங்களால் ஓய்ந்து போயிருந்த மாமா, வேளைக்கே படுக்கச் சென்று விட்டார்.
வீட்டுக்கு வந்த நேரத்தில் இருந்து நானும் தேவமித்திரனும் இதுவரை கதைக்கவே இல்லை. வீடு நிறைய ஆட்களாக இருநததால் அப்படியான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
அதோடு, பாமதி அக்கா கமநல உணவகத்தில் சொல்லி எல்லாருக்கும் பால்தேநீரும் உழுந்து வடையும் றொட்டியும் எடுத்திருந்தா. வநதிருந்த எல்லோருக்கும் உணவு பரிமாறி அவர்களை அனுப்பிவிட்டு தேவமித்திரனின் நண்பர்கள் ஓரிருவர் மட்டும் அவரோடு கதைத்துக்கொண்டிருக்க, நானும் குளிக்க என்று பாமதி அக்கா வீட்டுக்குப் போய்விட்டேன்.
காலையில இருந்து அலைச்சலும் ஓட்டமுமாக இருந்ததில் பிள்ளைகள் மூவரும் குளித்து சாப்பிட்டு ஏழு மணிக்கே நித்திரையாகிவிட்டனர்.
நான் குளிக்க போகும்போதே அவர்கள் படுப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.
நீளமான ஓலைப்பாய் ஒன்றை விரித்து ஒரு பக்கத்தில் அகரனையும் இனியனையும் படுக்கச் சொல்லிவிட்டு மறு கரையில் தன்னுடைய தலையணையை வைத்திருந்தா.
தனக்கு அருகில் சிறிய மெத்தை ஒன்றை வண்ணமதிக்கு போட்டுக் கொடுத்திருந்தா.
'பெண்பிள்ளைகள் என்றால் பாமதி அக்காவுக்கு சரியான விருப்பம்' நான் வண்ணமதியோடு மாமா வீட்டுக்கு வந்த அன்று தேவமித்திரன் சொல்லியது நினைவுக்கு வந்தது எனக்கு.
"அக்கா... வண்ணமதி என்னோட படுத்து பழகிவிடடாள்... "என்றேன் பாமதி அக்காவிடம்.
"அது.... நான் பாத்துக்கொள்ளுறன்... நீ அங்க போய் அப்பாவையும் தேவாவையும் பாரம்மா... "என்றுவிட்டு
"உந்த அறுவாங்கள் அடிச்சுப்போட்டானுகளோ தெரியேல்ல..." என்றா கவலையுடன்.
மேகவர்ணன் அண்ணாவும் பார்கவியும் சாப்பாடு எடுத்துக்கொண்டு அப்போதுதான் வெளிக்கிட்டனர்.
சீலன் அண்ணா வும் போக வெளிககிட என்னுடைய காரில் சீலன் அண்ணாவையும் ஏறறிக் கொண்டு போங்கோ அண்ணா என்று கார்ச்சாவியை அவர்களிடம் கொடுத்து விட்டு குளிக்கப்போய்விட்டேன்.
சீலன் அண்ணாவின் சின்ன மகளோ, பாமதி அக்காவை விட்டு வரமாட்டேன் என அடம்பிடிதது அழுதாள். இரண்டு வயதுக்குழந்தையின் அந்த அழுகையால் நாங்கள் எல்லோருமே ஆச்சரியமடைந்தோம்.
பிறகு வேறு வழியின்றி பாமதி அக்காவிடமே குழந்தையை விட்டு விட்டு தான் மட்டும் வீட்டுக்கு போனார் சீலன் அண்ணா.
நான் பாமதி அக்கா வீட்டிலிருந்து வரும்போது மாமாவும் சாப்பிட்டுவிட்டு படுக்க ஆயத்தமாகிவிட்டார்.
எனக்கும் தேவமித்திரனுக்குமாக எடுத்து வந்த சாப்பாட்டை தடடுகளில் போட்டு மூடி வைத்து விட்டுப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் நண்பர்களை அனுப்பிவிட்டு வந்த தேவமித்திரன்,
"சமர்... சரியா பசிக்கிதம்மா.."+. என்றார்.
இடியப்பம் சொதி முட்டைக்குழம்பு என்று போட்டுவைத்திருந்த சாப்பாட்டை எடுத்து தேவமிததிரனிடம் கொடுக்க நினைத்துவிட்டு, அப்படியே எழுந்து அவருடைய ஒரு தோள்பட்டையில் சாய்ந்தபடி குலுங்கி அழத்தொடங்கினேன்.
"சமர்... என்னடா... அதுதான் வநதிட்டனே... நீதான் போராடி என்னைக் கொண்டு வந்திட்டியே... " என்றார்.
ஆனால் அவருடைய கண்களிலும் கண்ணீர் பெருககெடுததுக் கொண்டுதான் இருந்தது. சற்று நேரம் இருவரும் அழுதுகொண்டிருந்தோம்.
"என்ரை சண்டைககாரிக்கு இண்டைக்கு ஒரே அழுகையடாப்பா...."என்றார் என்னைத் தேற்ற நினைத்து.
நான் ஒருவாறு சமாதானமாகி நிமிர்ந்து அமரவும்,
"சமர், இதாலைதானடா நான் கலியாணம் வேண்டாம் என்று சொன்னது, உனக்கு விளங்கிது தானே?" என்றார்.
எனக்கு எல்லாம் விளங்கிது, உடனேயே நாங்கள் பதிவுத்திருமணம் செய்வம், என்ன வந்தாலும் சேர்ந்து எதிர்கொள்ளுவம்... அதுக்காக நீங்கள் இதை எல்லாம் செய்யக்கூடாது எண்டு நான் சொல்லமாட்டன், நீங்கள் ஒரு வேட்கை கொண்ட மனிதர். உங்கட தாகத்தை அணை போட்டு தடுக்க ஏலாது, நான் தடுக்கவும்மாட்டன்.
உங்களை மாதிரி மனிதர்கள் மிக ஆரிது. அந்த ொருசிலரும் பயந்து தங்கட இலட்சியங்களிலை இருந்து பின்வாங்கினால் யார்தான் சமூக மாற்றத்துக்காகப் போராடுறது, யார்தான் மக்களை ஒற்றுமையாக்கிற ஒண்றிணைக்கிற பணியைச் செய்யிறது, எப்படி எங்கட இனம் மீள எழும்பிறது... " என்றேன்.
"சமர்... உன்னை நினைக்க எனக்கு பெருமையா இருக்கடா...இனிமேல் இதையெல்லாம் செய்யக்கூடாது எண்டு சொல்லுவியோ, எப்படி விளங்கப்படுத்துறதோ எண்டு யோசிச்சுக்கொண்டு இருந்தன். இப்ப மனம் ஆறுதலாக இருக்கு...
சமர், எனக்கு ஏதும் நடந்தாலும் பிறகும் இந்தப் பணிகளை எல்லாம் நீதான் முன்னெடுத்துச் செய்ய வேணும், அதுதான் எங்கட மாவீரருக்கு நாங்கள் செலுத்துற புனித அஞ்சலி.... மக்களின்ரை விடிவுதான் அவர்களின்ரை கனவாக இருந்தது. அதுக்காக நாங்கள் ஒவ்வோருத்தரும் உழைக்கவேணும், மாவுரர்களின்ரை கனவுகளை ஒருநாளும் நாங்கள் மறந்து வாழ ஏலாது" என்றார்.
சாப்பிட்டுவிட்டும் இருவரூம் அதே இடத்தில் அமர்ந்து இருந்தபடி கதைத்துக்கோண்டிருந்தோம்.
நேரம் போனதே தெரியவில்லை. தூரத்தில் எங்கோ சேவல் கூவும் ஒலி கேட்டது.
நிமிர்ந்து பார்த்தோம். இருவருடைய கரங்களும் ஒன்றை ஒன்று பற்றிப்பிடித்திருந்தன.
கிழக்கு வெழுக்கத் தொடங்கியது.
முற்றும்...
கருத்துகள் இல்லை