உலக புத்தக தினம் (Apr 23, 2025)
[ தலைவர் ஒரு புரட்சியாளனாக இருந்து ஒரு கோட்பாட்டாளனாகப் பரிணமித்தவர். அவர் போராடும் தேசிய இனங்கள் சார்ந்து ஒரு புதிய வடிவத்தை நந்திக்கடலில் அறிமுகம் செய்தார். அதைக் கண்டடைவதும் கோட்பாட்டுருவாக்கம் செய்வதும் பின்னுள்ளவர்களின் பணி, கடமை. நிறைய போதாமைகள் உள்ள போதும் பெரும் பிரயத்தனப்பட்டு நாங்கள் நண்பர்களாக அதற்கு ஒரு கோட்பாட்டு வடிவத்தைக் கொடுக்க முயன்று வருகிறோம்.
அதை ஏனைய ஆளுமைகளும் தொடர வேண்டும் என்றும் விரும்புகிறோம். பல இளைய தலைமுறையினர் இணைந்து விட்டார்கள் என்பது பெரு மகிழ்வு.
இன அழிப்பினூடாகத் தமிழீழ நடைமுறை அரசு அழிக்கப்பட்ட பின்பாக புலிகளின் பக்கம் நின்று அவர்களது நியாயத்தையும், அறத்தையும், ஓர்மத்தையும், இறைமையையும், பரிமாணங்களையும், உத்திகளையும் கோட்பாட்டுருவாக்கம் செய்யும் முதல் நூல் என்ற பெருமையைத் தனதாக்கிக் கொள்கிறது ‘ பிரபாகரன் சட்டகம்’. ]
🟥 பிரபாகரன் சிந்தனைப் பள்ளி ( நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்கச் சிந்தனைப் பள்ளி )
கருத்துகள் இல்லை