என்ன நடக்கிறது வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்?

ஆளுநர் அலுவலகத்தில் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் என அத்தனை பேர் இருந்தாலும் ஆளுநரின் ஊடக இணைப்பாளரிடம் தான் பொதுமக்கள்


தங்கள் பிரச்சினைகளை சொல்ல வேண்டுமாம்? அங்கிருக்கும் அத்தனை உத்தியோகத்தர்களை விட ஊடக இணைப்பாளர் அதிகாரம் கொண்ட நபரா? 


யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலை சமூகம் ஆளுநரை சந்திக்க சென்றபோது வடக்கு ஆளுநர் ஊடக இணைப்பாளரின் தொலைபேசி இலக்கத்தை வழங்கி " ஏதும் பிரச்சினை என்றால் இவருக்கு சொல்லுங்க" என்று கூறியுள்ளார். 


நேர்மையான நபர் என கூறிக்கொண்டு ஆளுநர் பதவிக்கு வந்த திரு. வேதநாயகம் ஐயா ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்? 


அத்துடன், கடந்த 2023 ம் ஆண்டு வவுனியாவில் மாணவியை பனை மட்டையால் தாக்கிய ஆசிரியருக்கு விசாரணைகள் முடிந்து தற்போது இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், வட மாகாண ஆளுநரின் ஊடக இணைப்பாளரின் மூலமாக ஆளுநரை சந்தித்து இடமாற்றத்தை இரத்து செய்யும் வேலைகளில் குறித்த ஆசிரியர் இறங்கியுள்ளார். இதற்காக கடந்த காலங்களில் ஆளுநரையும் இந்த ஊடக இணைப்பாளரின் உதவியுடன் சந்தித்துள்ளார். 


இவ்வாறு மாணவியை பனை மட்டையால் மூர்க்கத்தனமாக தாக்கி, குறித்த மாணவியை வீட்டுக்கு சென்று மிரட்டி, தற்கொலைக்கு தூண்டி, தற்போது விசாரணைகள் முடிவடைந்து தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியருக்கு வடமாகாண ஆளுநரின் ஊடக இணைப்பாளர் எதற்காக உதவி புரிகின்றார்? 


 வடமாகாண ஆளுநர் செயலகம் நேர்மையாக இயங்குகிறதா? அல்லது பதவி , அதிகார துஷ்பிரயோகங்களுக்கு துணைபோகிறதா?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.