புதிய கட்டிடத்திற்கு ஆதார வைத்தியசாலை ENT கிளினிக் இடமாற்றம்!📸
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் காது மூக்கு தொண்டை பிரிவு புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் குணசிங்கம் இன்று (28) திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். காது, மூக்கு, தொண்டை சாய்சாலையானது வார நாட்களில் காலை 8.00 முதல் 12 மணிவரையும் சனிக்கிழமைகளில் உத்தியோகத்தர்கள் மாணவர்களுக்காகவும் சிகிச்சைக்காக திறந்திதிருக்கும்.
ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்களில் கிளினிக் இடம்பெறாது. இந்த சாய் சாலைக்கு மாதாந்தம் சுமார் 500 நோயாளர்கள் வருகை தருவதுடன், வருடத்திற்கு 6000 நோயாளர்கள் சிகிச்சையின் பலனை அனுபவிக்கின்றனர்.
இந்த இடமாற்றமானது எதிர்காலத்தில் மேலும் சிகிச்சைகளை விஸ்தரிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை