புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும்!

 


ஆலய சுற்றுவளாகங்களை புனிதப் பிரதேசமாக அறிவித்து, அப்பகுதியில் மதுபானம் மற்றும் கேளிக்கை வர்த்தகங்களைத் தடை செய்யும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட வேண்டுமென தமிழ்ச் சைவப் பேரவையினர் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் வலியுறுத்தியுள்ளனர்.


இக்கோரிக்கையை முன்வைக்கும் சந்திப்பு நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.


இச்சந்திப்பின்போது நல்லூர் ஆலயச் சுற்றாடலிலும் அதேபோல் யாழ். மாநகர சபை எல்லைக்குள்ள பிற புனித இடங்களிலும் மதுபானம் மற்றும் கேளிக்கையை ஆதரிக்கும் வர்த்தகங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நல்லூர் ஆலயச் சுற்றுவட்டத்தில் அண்மையில் அனுமதியின்றி திறக்கப்பட்ட உணவகத்திற்கு, யாராவது மாநகர சபை ஊழியர்கள் அனுகூலமாக இருந்தார்களா? என்பதை ஆராய சுயாதீன விசாரணை குழுவொன்றை அமைக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் மற்ற உள்ளூராட்சி மன்றங்களும் தத்தமது ஆட்சி எல்லைக்குள் உள்ள ஏனைய ஆலயங்களுடன் இணைந்து, அவை புனிதப் ùபிரதேசங்களாக அறிவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் பேரவை வலியுறுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.