குணா கவியழகனின் 'கடைசிக் கட்டில்'!-டோட்மூன்ட்!📸
கடந்த சனிக்கிழமை 03.05.2025 அன்று குணா கவியழகனின் 'கடைசிக் கட்டில்' நாவல் அறிமுக நிகழ்வு யேர்மனியின் டோட்முண்டன் நகரில் தமிழர் அரங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வை பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தியிருந்தது. யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நிகழ்விற்கு ஆதரவு வழங்கியது.
'கடைசிக் கட்டில்' நாவல் பற்றிய உரைகளை இந்து லிங்கேஸ், வி.சபேசன், ரவிமாஸ்டர், சாந்தி நேசக்கரம் ஆகியோர் நிகழ்த்தினார். நாவல் பேசுகின்ற விடயங்கள் பற்றி விதந்துரைக்கப்பட்டது. ஆதே வேளை குணா கவியழகனின் முன்னைய நவாவல்களில் இருந்து கடைசிக் கட்டில் வேறுபட்டு இருப்பதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
நாவல் பற்றியும் இன்றைய அரசியற் சூழலில் எழுத்தாளனுக்கு உள்ள வகிபாகம் பற்றியும் குணா கவியழகன் உரையாற்றினார். குணா கவியழகனுடன் கலந்துரையாடலின் போது பார்வையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நாவலில் தலைவருடைய மரணம் பற்றி பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள் பற்றியும் சிலர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். எதை எப்படிச் சொல்ல வேண்டும் என்னும் சுதந்திரம் எழுத்தாளனுக்கு உண்டு என்றும் சிலர் வாதிட்டனர். எல்லாவற்றிற்கும் குணா கவியழகன் தனது பதில்களை சொன்னார்.
இலக்கியமும் அரசியலுமாக நிகழ்வு இனிதாக நிறைவு பெற்றது. நிகழ்வின் சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
-நிருபர் வி.சபேசன்-
கருத்துகள் இல்லை