பகிடிவதை தொடர்பாக மேலும் நான்கு பேர் பொலிசில் சரணடைந்தனர்!
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் அதே பல்கலைக்கழகத்தில் நடந்த பகிடிவதை நாசவேலை சம்பவத்தால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மேலும் நான்கு மாணவர்கள் திங்கட்கிழமை (05) சமனலவேவ காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.
அதன்படி, காவல்துறையினரிடம் சரணடைந்த நான்கு சந்தேக மாணவர்களும் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், திங்கட்கிழமை (05) பிற்பகல் பலாங்கொடை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், நான்கு மாணவர்களையும் மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை