ஆலங்கட்டி மழையால் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்


இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆலங்கட்டி மழை காரணமாக நடுவானில்  சேதமடைந்த இண்டிகோ  விமானம், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று (21) மாலை கனமழை கொட்டித் தீர்த்தது.

இதன் காரணமாக டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம் ஒன்று, நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஆலங்கட்டி மழையால் முன்பகுதி சேதமடைந்தது.

பயணிகள் அச்சமடைந்த நிலையில், விமானியின் சாமர்த்தியத்தால் 227 பயணிகளுடன் விமானம் பாதுகாப்புடன் ஸ்ரீநகரில் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.     


2.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.