யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய மேயராக மதிவதனி விவேகானந்தராஜா தேர்வு!📸
யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய மேயராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (இல.த.அ.க) விவேகானந்தராஜா மதிவதனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று (13 ஜூன்) காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தேர்தல் நிலவரம்:
யாழ் மாநகர சபையில் மொத்தம் 45 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் மேயர் பதவிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மதிவதனி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவில்:
மதிவதனிக்கு – 19 வாக்குகள்
கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாருக்கு – 16 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்கள் நடுநிலையான நிலைப்பாட்டில் இருந்தனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), ஐக்கிய மக்கள் சக்தி (SJB), மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகிய கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.
பிரதி மேயராக தேர்வு:
பிரதி மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் தேர்வு செய்யப்பட்டார்.
கட்சி பங்கீடு:
கட்சி ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி 13
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12
தேசிய மக்கள் சக்தி 10
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 4
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 4
ஐக்கிய மக்கள் சக்தி 1
ஐக்கிய தேசியக் கட்சி 1
அரசியல் பின்னணி:
மேயர் பதவியை கைப்பற்ற களமிறங்கிய முக்கிய தமிழ் கட்சிகள் – இலங்கைத் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் – வெவ்வேறு கூட்டணிகளை அமைத்து பலப்பரிசை நடத்தினன.
இதேவேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி இணைந்து ஒரு கூட்டணியாக இயங்கியிருந்தன.
கருத்துகள் இல்லை