நல்லூரில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!📸
நல்லூர், 12.06.2025 – நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று (12.06.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
கூட்டத்தின் தொடக்கத்தில் பிரதேச செயலர் வரவேற்புரையாற்றினார். அதன் பின்னர், கடந்த 24.03.2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான முன்னேற்ற நிலைகள் விரிவாக ஆய்வுசெய்யப்பட்டன.
மேலும், அனர்த்த கால பதிலிறுப்பு நடவடிக்கைகள், பொதுமக்கள் பாதுகாப்புக் குழுவின் வலுப்படுத்தல், திண்மக்கழிவு முகாமைத்துவம், கிராமிய வாழ்வாதார மேம்பாட்டுக்கான அரச நிதிப் பங்களிப்பு, மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து உரையாடல் நடைபெற்றது. இத்துடன், இவ்வருடம் அரச நிறுவனங்களால் நல்லூர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் பற்றியும் இந்தக் கூட்டத்தில் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
கூட்டத்தில் பல்வேறு அரச அதிகாரிகள், பொதுப் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய பிராந்தியக் குழுக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை