தையிட்டி விகாராதிபதிக்கு வெளியேறக் கோரி கடிதம்: சட்டவிரோத ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு!
யாழ்ப்பாணம், ஜூலை 22, 2025: யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியான ஜின்தோட்ட நந்தராம தேரரை, தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தையிட்டி இறை, முத்துக்கலட்டி என்னும் பகுதியில், தனக்குச் சொந்தமான ஆதனத்தை ஜின்தோட்ட நந்தராம தேரர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அங்கு புதிய கட்டுமானம் ஒன்றை அமைத்து வருவதாக ஒரு பொதுமகன் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு ஜின்தோட்ட நந்தராம தேரர் உரித்தாளர் என்றால் அதற்குரிய ஆவணங்களை ஒப்படைக்குமாறும், இல்லையேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் தவிசாளர் சுகிர்தன் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு வெளியேறாவிடின், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்...
கருத்துகள் இல்லை