புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!📸
இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது .
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு - கட்டம் 2, 17ஆவது நாள்.
இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.
எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன . குழந்தைகள் அருந்தும் பால் போச்சி( போத்தல்) என சந்தேகிக்கப்படும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது , இவற்றில் 65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை