பொலிஸ் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு!
வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் காலை 10.30 மணியளவில் வெவ வீதியில் இடம்பெற்றுள்ளது. காரில் வந்த குழுவொன்று மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாக்கியதுடன், பின்னர் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களையும் கூரிய ஆயுதங்களால் தாக்கிய பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றவர் காயங்களுடன் தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கு குற்றவாளிகள் ரிவோல்வர் பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையாளர்களின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் நடந்துகொண்டிருக்கும் உயர் நீதிமன்ற வழக்கு தொடர்பாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு திரும்பியுள்ளனர். பலியானவருக்கு செப்டம்பர் 9ஆம் திகதி நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படவிருந்தது.
சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை