வீடொன்றில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!.


பதுளை, பசறை, 10-கணுவா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 33 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


​பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

​உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.