தொலைத்தொடர்பு கோபுர 44பேட்டரிகளுடன் இருவர் கைது!
களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் 44 தொலைத்தொடர்பு கோபுர பேட்டரிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு பேட்டரியின் மதிப்பு சுமார் 30,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதால், மொத்தம் 14 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரிகள் மீட்கப்பட்டுள்ளன.
இவை பெரியபோரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து திருடப்பட்ட 24 பேட்டரிகளும், சம்மாந்துறை தொலைத்தொடர்பு கோபுரங்களிலிருந்து திருடப்பட்ட 20 பேட்டரிகளும் உள்ளடங்கியவை ஆகும்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட பேட்டரிகளும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை