இல்லத்திலிருந்து வெளியேறினார் மைத்ரிபால!

 


முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (11) காலை வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


குறித்த இல்லம் கொழும்பு ஹெக்டர் கொப்பேக்கடுவ மாவத்தையில் அமைந்துள்ளது.


ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமைகள் இரத்து சட்டமூலம் மறுசீரமைப்புகள் இன்றி நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளின் பாரியார்கள் உட்பட ஓய்வுப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளும் இரத்தாகியுள்ளன.


இந்நிலையில் சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கையொப்பமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.