முல்லைத்தீவில் அனுர கூறிய முக்கிய விடயம்!!
இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தாம் எந்த எல்லைக்கும் செல்வோம் எனவும் தோல்வியடைந்த அரசியல் வாதிகளே இனவாதத்தை கையில் எடுத்துச் செயற்படுகின்றனர் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று(02.09.2025) முல்லைத்தீவில் நடந்த தெங்கு முக்கோண தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாம் ஒருபோதும் இனவாத அரசியலுக்கு இடமளிக்கும் மாட்டோம் எனவும் , நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் குறிக்கோளுடனேயே தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பழைய இனவாத கோஷங்களுக்கு எதிரான முற்போக்கான செயற்பாடுகளை நாம் ஒரு போதும் பின்னோக்கி நகர்த்த மாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..
கருத்துகள் இல்லை