இஷாரா செவ்வந்திக்கு உதவிய படகு கைப்பற்றபட்டது!

 


கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.  


இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தனிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது. இது இவருக்கு சொந்தமான 400 குதிரைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட படகு எனத் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.