தமிழ் - சிங்கள 20 தம்பதியினருக்கு வவுனியாவில் திருமணம்!


வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசார்ட் பதியுர்தீனால் 20 தமிழ் மற்றும் சிங்கள தம்பதியினருக்கு பதிவு கலப்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது.


வவுனியா மாநகர சபை கலாச்சார மண்டபத்தில் (07.10.2025) இடம்பெற்ற குறித்த திருமண நிகழ்வில் பத்து தமிழ் தம்பதியினரும் 10 சிங்கள தம்பதியினருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது.


குறித்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியுர்தீன், முத்துமுகமது மற்றும் மத குருமார் வவுனியா மாநகர மேயர், துணை மேயர் மற்றும் பிரதேச சபை தலைவர்கள் உட்பட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.