இலங்கையில் பேரழிவு பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு.!📸


இலங்கையைத் தாக்கிய கடுமையான வானிலை காரணமாக ஏற்பட்ட பேரழிவில் பலி எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது அத்துடன் மேலும் 191 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவித்துள்ளது.


இன்று (நவம்பர் 29) மாலை 6.00 மணிக்கு DMC வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களிலும் இந்த அனர்த்த நிலைமையினால் 2,17,263 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தமாக 7,74,724 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்டோருக்காக நாடு முழுவதும் 798 பாதுகாப்பான மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் 27,494 குடும்பங்களைச் சேர்ந்த 1,00,898 நபர்கள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


சில பகுதிகளில் மழை நிலைமைகள் சற்றுக் குறைந்துள்ள போதிலும், பல மாவட்டங்களில் அபாயங்கள் நீடிப்பதால், அதிகாரிகள் தொடர்ந்து பாரிய அளவில் மீட்பு, நிவாரணம் மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.