யாழ் நெடுந்தீவில் 41 மில்லியன் கஞ்சாமீட்பு, இருவர் கைது!

 


வடக்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் வசப நிறுவனம், அந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கடலோர ரோந்து கப்பலை ஈடுபடுத்தி, 2025 அக்டோபர் 30 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள உள்ளூர் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பதைக் கவனித்து சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், அந்த டிங்கி படகில் ஆறு பைகளில் எண்பத்தைந்து பொதிகளில் பொதி செய்யப்பட்ட நூற்று எண்பத்தைந்து கிலோகிராம் கிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற, இரண்டு சந்தேக நபர்களும் அந்த டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 30 வயதுடைய யாழ்ப்பாணம் மண்டைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். மேலும், சந்தேக நபர்கள், கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


யாழ்ப்பாணத்தில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து , அதனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். 


அதன் போது படகினுள் இருந்து , 185 கிலோ 600 கிராம் கஞ்சா போதை பொருளை மீட்டுள்ளனர். அதனை அடுத்து , படகில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர். 


மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 41 மில்லியன் ரூபாய் பெறுமதியானது எனவும் , மீட்கப்பட்ட கஞ்சா . மற்றும் படகு என்பவற்றுடன் , கைது செய்யப்பட்ட இருவரையும் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நெடுந்தீவு பொலிசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர் 


நெடுந்தீவு பொலிஸார் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , விசாரணைகளின் பின்னர் இருவரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.