மாஞ்சோலை வைத்தியசாலையின் அசமந்தம்!!

 


மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற இளைஞன் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்றையதினம் (29.12.2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இளைஞனின் சகோதரி  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

27 வயதுடைய எனது சகோதரர்  வீதி விபத்தில் சிக்கியிருந்த நிலையில், மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

மூன்று மாதமாக கை முறிந்ததாக கூறி பீ.ஓ.பி போட்டிருந்தார்கள். ஆனால் கை முறியவில்லை கையிலிருந்து வரும் நரம்பு அறுந்திருந்தது. ஆனால் அதனை கண்டுபிடிக்க முடியாமல் முறிவென கூறி பீ.ஓ.பி போட்டிருந்தார்கள். அதனால் சகோதரரின் கை பாரிசவாதமாக வந்துவிட்டது.

வவுனியாவில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று எலும்பு முறிவு வைத்தியரிடம் காட்டிய போது வைத்தியர் பார்த்து விட்டு கூறினார். இது எலும்பு பிரச்சினை இல்லை. நரம்பு பிரச்சினை என. அப்போது இங்குள்ள வைத்தியருக்கு அது தெரியாது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.