விசாரணை கோரும் இரா.சாணக்கியன்!!
இம்மாதம் 2 ஆம் திகதி மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரால் சைக்கிள் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 59/24, வாவிகாரி வீதி, சின்ன உப்போடை, மட்டக்களப்பைச் சேர்ந்த சிவநேசராசா ரினோஷன் (வயது 23) என்ற இளைஞரின் மர்ம மரணம் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரியிருக்கின்றார்.
இது தொடர்பில் இரா.சாணக்கியன் ஊடகங்களிடம் கூறுகையில்,
கைது செய்யப்பட்ட இரவு மாலை 7 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் அவரைக் கடைசியாகப் பார்த்தனர் எனவும், அப்போது அவர் நலமாக இருந்தார் எனவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
டிசம்பர் 3 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, முந்தைய இரவு அவர் தாக்கப்பட்டிருக்கின்றார் எனத் தோன்றியதாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர். பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு டிசம்பர் 5 ஆம் திகதி சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் நேற்று (டிசம்பர் 7 ஆம் திகதி) இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டது.
பொலிஸ் துறையின் மிருகத்தனம் காரணமாக அவரது மரணம் ஏற்பட்டது என்று உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான நோய் காரணமாக அவரது மரணம் ஏற்பட்டது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
விசாரணை மட்டக்களப்பு பொலிஸாரிடமிருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும். மேலும் தவறு நிரூபிக்கப்பட்டால் பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் சாணக்கியன் தெரிவித்தார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை