தந்தை செல்வாவின் நினைவேந்தலா? அல்லது தமிழினப் படுகொலைக்குத் துணை நின்றவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா?


இலங்கைத்தமிழரசுகட்சிக்கு ஒரு பகிரங்கக் கேள்வி!

ஈழத் தமிழினத்தின் தந்தை என்று போற்றப்படும் #தந்தைசெல்வா அவர்களின் 49-வது நினைவு நாளில், பேராசிரியர் G.L. பீரிஸ் அவர்களை நினைவுப் பேருரை ஆற்ற அழைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழின உணர்வாளர்களின் முகத்தில் கரியைப் பூசும் செயலாகும்.


தமிழரசு கட்சியே... உங்களுக்கு இதயம் என்று ஒன்று இருக்கிறதா? அல்லது அரசியல் லாபத்திற்காகத் தியாகங்களை அடகு வைத்துவிட்டீர்களா?


நாங்கள் கேட்கும் கேள்விகள் இவைதான்:

யார் இந்த G.L. பீரிஸ்?

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போதும், அதற்குப் பின்னரும் உலக அரங்கில் நின்று தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தியவர். ஈழத் தமிழர்களின் குருதி படிந்த கரங்களைக் கொண்ட அரசாங்கங்களில் முக்கிய அமைச்சராக இருந்தவர். அவரைத் தந்தை செல்வாவின் மேடையில் ஏற்றுவது தியாகங்களை அவமதிப்பதல்லவா?

இனப்படுகொலைக்குத் தமிழரசு கட்சி ஆதரவா?

நம் இனத்தை வேரோடு அழிக்கத் துணை நின்றவரை தமிழ்த் தேசியத்தின் அடையாளத்தின் நினைவுப் பேருரைக்கு அழைப்பது வரலாற்றுத் துரோகமல்லவா?


இனவழிப்புக்குத் துணைநின்ற ஒருவருக்கு வெள்ளையடிப்பதற்கு தமிழரசு சார்ந்தோர் கையிலெடுத்துள்ள ஆயுதம் அவரைக் கொண்டே சமஸ்டி பற்றிப் பேசவைக்கப் போகின்றோம்” என்பதாகும். 


அழைப்பு விடுத்த தரப்புக்கு உண்டமயில் சமஸ்டி நிலைப்பாடு என்பதில் நேர்மையாக இருந்தால் 

ஜீஎல்பீரிசு அவர்களை சிங்கள மத்தியில் சென்றும் தென்னிலங்கையில் சிங்கள ஊடகங்களுக்கும் சென்று

#சமஸ்டி பிரிவினை அல்ல என்பதனையும் தமிழர்கள் சமஸ்டி கோருவதில் நியாயம் உண்டு என்றும் பொதுவெளியில் பேசுமாறு கேளுங்கள். 


அதனை விடுத்து 75 ஆண்டுகளாக சமஸ்டி கேட்ட மக்கள் முன்னிலையில் காலம் முழுவதும் உரிமைகளை தரமறுத்தவர்களுடன் உடனிருந்தவரை அழைத்து போதனை செய்யச் சொல்வது நயவஞ்சகம். 


அனுரதரமாட்டார் மீண்டும் கோட்டா அல்லது மகிந்த வந்தால் சமஸ்டி தருவார்கள் என்று நம்பவைக்க முயல்கிறார்களா. 


இது படுகொலை செய்தவர்களுக்குக் கொடுக்கப்படும் நற்சான்றிதழ் (Clean Sheet) ஆகாதா?

கொள்கை எங்கே போனது?

தந்தை செல்வா அகிம்சை வழியில் எதற்காகப் போராடினாரோ, அந்த லட்சியத்தை அதே மேடையில் வைத்துச் சிதைக்கத் துணிந்தது எப்படி? இதுவா நீங்கள் காட்டும் தமிழ்த் தேசியம்?

மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்!

ஒருபுறம் தமிழ்த் தேசியம் பேசுவதும், மறுபுறம் தமிழின விரோதிகளுடன் கைகோர்ப்பதும் என இரட்டை வேடம் போடுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தந்தை செல்வாவின் நினைவேந்தல் என்பது தமிழர்களின் அரசியல் உரிமையை உரக்கச் சொல்லும் இடமே தவிர, இனப்படுகொலைக்குத் துணை நின்றவர்களுக்கு அரசியல் மேடை அமைத்துக் கொடுக்கும் இடம் அல்ல!

வரலாறு யாரையும் மன்னிக்காது. 


தமிழரசு கட்சியே, இந்த வரலாற்றுத் தவறுக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்!


வேண்டுமானால் இரண்டு தேசங்கள் உள்ள இலங்கை நாட்டின்குச் ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்பதனையும் 

தமிழர்களுக்குச் சமஸ்டி கொடுக்க வேண்டும் என்ற மனப்பான்மையை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பிரசாரங்களுக்காக பீரிசை தென்னிலஙலகையில் பயன்படுத்துங்கள். அதனைவிடுத்து....!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.