தவெக நிர்வாகிகள் 6 பேர் அதிரடி கைது. அதிர்ச்சியில் விஜய்..!!
த மிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியை முன்னிட்டு ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே ஆபத்தான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டும் மழையிலும் காரின் மீது அமர்ந்தும், தொங்கியபடியும் விசில் அடித்து ரகளையில் ஈடுபட்ட இவர்கள், பொதுமக்களுக்கும் பேருந்து போக்குவரத்துக்கும் கடும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த அத்துமீறல் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் (SM) வைரலாகி பெரும் கண்டனங்களைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து துரிதமாகச் செயல்பட்ட போலீசார், சம்பந்தப்பட்ட 6 நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ததோடு, அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை