முக்கிய குற்றவாளி கைது!!


 தெமட்டகொட சமிலவின் ஆதரவாளரென சந்தேகிக்கப்படும், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நாவலப்பிட்டி பொலிஸாரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுக்கை பிரதேசத்தில் வசிக்கும் குறித்த சந்தேகநபர் நாவலப்பிட்டி, பல்லேகம பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலுக்கமைய, நாவலப்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.