மானியமாக வழங்கப்பட்ட தென்னைகள் விற்பனை!!
வடக்கு மாகாண தென்னை வலய திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் 5 ஏக்கருக்கு மானியமாக வழங்கபட்பட்ட 320 தென்னை மரங்களை நபர் ஒருவர் விற்பனை செய்த சம்பவம் வவுனியா பம்பைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கமானது தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடக்கில் தென்னை உற்பத்தி வலயத்தை உருவாக்க கடந்த வருடம் முதல் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக ஏக்கருக்கு 64 தென்னை மரங்கள் வீதம் அரச மானியமாக வழங்கப்படுவதுடன், அதற்கான பசளைகள், நீர் விநியோக நடவடிக்கைக்கான கொடுப்பனவுகள் என்பனவும் அரச நிதியில் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், வவுனியா மாவட்ட தென்னை அதிகார சபைக்குட்பட்ட பம்பைமடு கமநல அபிவிருத்தி பிரிவில் உள்ள செக்கட்டிப்புலவு பகுதியில் 5 ஏக்கர் காணி ஒன்றினை கொண்டிருந்த வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நபர் ஒருவர் மானியமாக தென்னை மரங்களை நடுவதற்கு விண்ணப்பித்து ஏக்கருக்கு 64 தென்னைகள் வீதம் 320 தென்னை மரங்களை பெற்றுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை