காட்டு யானையால் ஏற்பட்ட துயரம்!!

 


அரலகங்வில, ரத்மெல்தென்ன, பகுதியில் வசித்து வந்த முன்பள்ளி மாணவியே உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை காட்டு யானை வீட்டைத் தாக்கும் சத்தம் கேட்டுள்ளது.

அப்போது சிறுமியுடன் தூங்கிக்கொண்டிருந்த தாய் எழுந்த சென்ற சமயம் யானை வீட்டின் சுவரைத் தாக்கியுள்ளது.

இதில் சுவர் இடிந்து சிறுமியின் தலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.