போதையில் வாகனம் செலுத்திய சாரதி!!
மது போதையில் கண்டியில் இருந்து ஹற்றன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதியை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொண்டாட்ட நிகழ்வு ஒன்றில் நண்பர்களுடன் இணைந்து மது அருந்திய பின்னர் அவர் பேருந்தை இயக்கியமை தெரியவந்துள்ளது.
கண்டி தனியார் பேருந்து நிலையத்தின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உட்பட அறுவர் இணைந்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாலை வரை நடத்திய மதுபானக் கொண்டாட்டத்தின் பின்னர், இந்த சாரதி கடுமையான போதையில் பேருந்தைச் செலுத்தியுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கினிகத்தேனை, கெனல்வத்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கம்பளை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் கம்பளை, கஹட்டபிட்டிய பகுதியில் காலை வேளையில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த போது, இந்த சாரதி தொலைபேசி அழைப்பில் பேசியவாறே பேருந்தை அதிவேகமாகச் செலுத்திச் சென்றுள்ளார்.
இதனையடுத்து பேருந்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அவர் கடுமையான போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

.jpeg
)





கருத்துகள் இல்லை