வெளிநாடொன்றில் ஓடி ஒளியும் இலங்கையர்கள்!!

 


டுபாயில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை அந்நாட்டு பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, அங்கு தலைமறைவாக இருக்கும் இலங்கை பாதாள உலகக் குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நபர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அங்கிருந்து தப்பியோட முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரானுக்கு ஆதரவாக பல்வேறு செய்திகளை உருவாக்குதல் மற்றும் அரபு நாடுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ், டுபாயில் தங்கியிருந்த இலங்கை நாட்டவர்கள் சிலர் தற்போது அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.