அர்ச்சுனா இராமதனுக்கு வந்த கோரிக்கை!!

 


நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின் அரசியல்வாதியான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாக சுட்டிக்காட்டிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அர்ச்சுனா சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை கடுமையாக சாடியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின் அரசியல்வாதியான நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாக சுட்டிக்காட்டிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அர்ச்சுனா சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை கடுமையாக சாடியிருந்தார்.

இத்தகைய சூழலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தம்பி சீமானை குறிவைத்து, “ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்” என பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்து, தரக்குறைவாகப் பேசியிருப்பது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது.

தமிழ்நாட்டில் தமிழ்ச் தேசிய அரசியல் வளர்வதைச் சகித்துக்கொள்ள முடியாத தீய சக்திகளின் ஏவலாளியாகச் செயற்பட்டு, தமிழர் ஒற்றுமையைக் குலைக்கத் துடிக்கும் இந்த துரோக அரசியலைத் தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது.

அண்டை நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு பேசுவதைச் சம்பந்தப்பட்ட அரசுகள் வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது.

எனவே, ராமநாதன் அர்ச்சுனா தனது ஜனநாயக விரோதப் பேச்சினை உடனடியாகத் திரும்பப் பெற்று, தம்பி சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.