பிரதமர் லண்டனில் மக்கள் சந்திப்பு!!

 ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20ஆம் திகதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.


வாரத்தின் வேலை நாளாக இருந்தபோதிலும், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் அரசியல் கலாசாரம் தற்போது மீண்டும் திருப்ப முடியாத வகையில் சாதகமான மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு கூடியிருந்த மக்களிடம் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.