கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!!




 கொழும்பு துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீனர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கொலை செய்யப்பட்ட சீனப் பிரஜை, கணினி மூலம் நிதி மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை விளக்கும் வகையில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.