உலக கிண்ணத்தில் நடந்த நெகிழ்ச்சி செயல்!!
உலகக்கிண்ணக் கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியின் கோல் காப்பாளர் ஜோர்டான் பிக்போர்ட், ஆர்ஜென்டினா வீரர்களை எதிர்கொள்ள இரகசியக் குறிப்புகளைத் தனது தண்ணீர் போத்தலில் எழுதி வைத்துள்ளார்.
அவர் இந்த சுவாரசியமான இரகசிய உத்தியைக் கையாண்டது போட்டிக்குப் பிறகு தெரியவந்துள்ளது.
போட்டி ஒருவேளை பெனால்டி ஷூட்-அவுட் முறைக்குச் சென்றால் ஆர்ஜென்டினா வீரர்கள் எந்தெந்தப் பக்கங்களில் பந்தை அடிப்பார்கள் என்பதை முன்கூட்டியே கணித்துள்ள நிலையிலேயே இந்த உத்தியைக் கையாண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், போட்டி முடிந்த பிறகு அவர் அந்தத் தண்ணீர் போத்தலை மைதானத்திலேயே விட்டுச் சென்றதால், லியோனல் மெஸ்ஸி உள்ளிட்ட ஆர்ஜென்டினா வீரர்கள் அந்த இரகசியக் குறிப்புகளைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
இருப்பினும், போட்டியின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலையில் இருந்தது. ஆனால், போட்டியின் கடைசி 5 நிமிடங்கள் மற்றும் கூடுதல் நேர இடைவெளியில் ஆர்ஜென்டினா அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அதிரடி வெற்றிபெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை