நீதிக்கான போராட்டம் - யாழில் கூடிய முக்கியஸ்தர்கள்




 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் "நீதிக்கான நீள் பயணம்" எனும் சர்வதேச மாநாடு இடம்பெற்றுள்ளது.


இந்த மாநாட்டில் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்மிருதி சிங் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மாநாடு இடம்பெற்ற மண்டபத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாவனை பொருட்கள், அவர்கள் விரும்பி சேகரித்த பொருட்கள், அவர்களின் நினைவாக இன்றும் உறவுகளிடம் உள்ள பொருட்கள் என்பவற்றை காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், அவற்றையும் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.