236 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை!!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற 236 நபர்களுக்கு சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், போதைப்பொருள் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 37 நபர்கள் பெப்ரவரி 2025 முதல் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் 42 நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பிரிவு கூறியுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை