சிக்கலில் ஜனாதிபதி!!
மகா நாயக்க தேரர்கள், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் முன்னதாவே கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் குறித்த தமது கருத்துக்கள் தொடர்பாக மகா தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்று(12) ஒரு செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் மூலம், மூன்று பீடங்களை சேர்ந்த மகா நாயக்க தேரர்கள், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை