பம்பலப்பிட்டி பேருந்து நிலையம் புதுப்பிப்பு!!

 



பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


இத்திட்டம் போக்குவரத்து மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ் ஒரு பொது - தனியார் கூட்டாண்மையாகச் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் இதற்கான நிதி உள்ளூர் சமூகத்தின் நிதிப் பங்களிப்புகள் மூலம் வழங்கப்படுகிறது.

பிரதான தொடருந்து நிலையம், சுகாதார வசதிகள், கூரை, நடைமேடைகள், சிறப்பு மதில் சுவர்கள் மற்றும் மரைன் டிரைவ் மீது மேம்பாலம் கட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய புனரமைப்புப் பணிகள் மொத்தம் ரூ.55 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.