பிரித்தானியாவில் கடலில் மூழ்கிய இலங்கை குடும்பம்! இளைஞன் பலி!
பிரித்தானியாவின் சுற்றுலாத்தலமான ஈஸ்ட் சசெக்ஸ் (East Sussex) பகுதியில் உள்ள கேம்பர் சேண்ட்ஸ் (Camber Sands) கடற்கரையில் கடலில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த இளைஞர் பலியாகியுள்ளார்.
லண்டனில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று சுற்றுலாவுக்காக இந்த கடற்கரைப் பகுதிக்கு வந்த நிலையில், இந்தத் துயர சம்பவம் பதிவாகியுள்ளது. கடலில் இறங்கிய மூவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் சிக்கியிருப்பதாக மாலை 7:00 மணிக்கு அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை சசெக்ஸ் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து உடனடியாக பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஆபத்தில் சிக்கிய மூவரில் 16 வயது சிறுவன் மற்றும் 24 வயது நபர் ஆகிய இருவரும் பாதுகாப்பாக கரை திரும்பினர்.
எனினும், நீரில் மூழ்கிய 18 வயதுடைய மூன்றாவது இளைஞர் இரவு 7:30 மணியளவில் மீட்கப்பட்டார். சம்பவ இடத்திலேயே முதலுதவி மருத்துவக் குழுவினர் தீவிர உயிர்மீட்பு சிகிச்சைகளை அளித்தபோதிலும், அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து சசெக்ஸ் பொலிஸ் வெளியிட்ட அறிக்கையில்:
“துரதிர்ஷ்டவசமாக சம்பவ இடத்தில் முதலுதவியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தீவிர மீட்பு முயற்சிகளையும் மீறி அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
அப்பகுதியில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, அவசரகால படையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து ஒன்றாக கடற்கரைக்கு வருகை தந்த இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த உயிரிழப்பில் சந்தேகத்திற்கு இடமான சூழ்நிலைகள் எதுவும் இல்லை; இது குறித்து மரண விசாரணை அதிகாரி விசாரணை நடத்துவார் என்றும் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
#uktamil #NewsUpdate #tamil #TamilNews #tamilshorts Tamilarul.Net #Tamilarul #Media #London #srilankan #beach #death

.jpeg
)





கருத்துகள் இல்லை