நூற்றாண்டு கடந்த நீதி கோரல்!!

 




1915-1916 களில் துருக்கிய இளம் படையினரால் அர்மேனிய இனத்தவர்கள் மீது மேற்கொண்டிருந்த இனப்படுகொலைக்கான நீதி நூற்றாண்டைக் கடந்தும் இன்னும் அவர்களுக்கு கிடைக்கவில்லை, அதற்காக அவர்கள் தளராது போராடிக்கொண்டிருக்கிறார்கள், துருக்கியும் தொடர்ந்து இனப்படுகொலைக்கான பொறுப்பை தட்டிக் கழித்து வருகின்றமை நாம் அறிந்ததே. ஏறத்தாழ 1.5 மில்லியன் கிறிஸ்தவ ஆர்மேனியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.




பலரும் அறியாத இன்னொரு முக்கியமான விடயம்,


நீதியை தாங்களே கையில் எடுத்து ஆர்மேனிய இனப்படுகொலையை திட்டமிட்டு, ஒழுங்கு செய்து நடத்திய 3 துருக்கிய சகோதரர்களுக்கு (Talat Pasha, Enver Pasha, Jemal Pasha) தாங்களே தண்டனைகளை வழங்கியது.


(Denied formal justice, a number of Armenian militants settled on a vigilante

version)


Talat Pasha 1921 இல் ஆர்மேனிய இனப்படுகொலையில் தனது மொத்தக் குடும்பத்தையும் இழந்த Soghomon Tehlirian என்ற ஆர்மேனிய ராணுவ வீரனால் பேர்லின் நகரில் வைத்து சுட்டுக் கொல்லப்படுகிறான்.




1922 இல் Enver Pasha வும்,  Jemal Pasha வும் Turkestan மற்றும் Tiflis ஆகிய இடங்களில் வைத்து ஆர்மேனியர்களால் கொல்லப்பட்டார்கள்.


இனப்படுகொலையாளிகளுக்கான தண்டனைகளையாவது தங்களின் நீதிகளின் கீழ் அர்மேனியர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.