இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை!

2014 ஆம் ஆண்டு பாடசாலையில் மாணவன் ஒருவனை சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற அதிபர் ஒருவருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

மாத்தளை பகுதியை சேர்ந்த பெண் அதிபர் ஒருவருக்கே இவ்வாறு 5 வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) விதித்துள்ளது. 

தரம் ஒன்றிற்கு மாணவன் ஒருவனை அனுமதிப்பதற்காக 150,000 ரூபாவை இலஞ்சப்பணமாக பெற்றுக்கொண்டதற்காகவே குறித்த பெண் அதிபருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.