வவுனியாவில் போதைப் பொருள் மாத்திரைகளின் விற்பனை தீவிரம்!
வவுனியாவில் பொதுநிலையங்களை அண்மித்த சில பகுதிகளில் போதைப் பொருள் மாத்திரைகள் பிள்ளைகளுக்கு விநியோகிக்கப்படுவது பற்றி பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வவுனியா ஸ்ரீராமபுரம், பண்டாரிக்குளம், மகாரம்பைக்குளம், தோணிக்கல், ஆகிய பகுதியில் மாத்திரை யொன்று 100 ரூபாய்க்கு விற்கப்படு கின்றது.
குறிப்பாக 14 முதல் 19வரையான பிள்ளைகளுக்கும், இளம் வயதுடைய சில ஆட்டோ சாரதிகள் வாகன சாரதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றது.
இந்த மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் மயக்க நிலை கல்வியில் நாட்டமின்மை, ஆன்மிகத்தில் நாட்டமின்மை, உணவில் நாட்டமின்மை பெற்றோர்களுடன் முரண்படல், சகபாடிகளுடன் முரண்படல், அடிதடிகளில் நாட்டம் கொண்டுள்ளமை போன்ற விளைவுகளை எதிர்கொள்கின்றனர்.
இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனப் பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வவுனியா குடியிருப்புப் பகுதியில் போதைபொருள் பாக்கு (மாவா) மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட் டது.
பெற்றோர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியதையடுத்து போதை விநியோகம் அந்தப் பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டது. இதன்பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக குறித்த பகுதிகளில் போதைப்பொருள் மாத்திரைகள் இரகசியமாக பிள்ளைகளுக்கு விநியோகிக்கப்படு கிறது.
இதன் விளைவு குறித்து பிள்ளை களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டுமெனவும், குறித்த பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்து வதன் மூலம் இந்தச் செயற்பாட்டை மட்டுப்படுத்தி உதவுமாறு பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வவுனியா ஸ்ரீராமபுரம், பண்டாரிக்குளம், மகாரம்பைக்குளம், தோணிக்கல், ஆகிய பகுதியில் மாத்திரை யொன்று 100 ரூபாய்க்கு விற்கப்படு கின்றது.
குறிப்பாக 14 முதல் 19வரையான பிள்ளைகளுக்கும், இளம் வயதுடைய சில ஆட்டோ சாரதிகள் வாகன சாரதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றது.
இந்த மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் மயக்க நிலை கல்வியில் நாட்டமின்மை, ஆன்மிகத்தில் நாட்டமின்மை, உணவில் நாட்டமின்மை பெற்றோர்களுடன் முரண்படல், சகபாடிகளுடன் முரண்படல், அடிதடிகளில் நாட்டம் கொண்டுள்ளமை போன்ற விளைவுகளை எதிர்கொள்கின்றனர்.
இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனப் பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வவுனியா குடியிருப்புப் பகுதியில் போதைபொருள் பாக்கு (மாவா) மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட் டது.
பெற்றோர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியதையடுத்து போதை விநியோகம் அந்தப் பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டது. இதன்பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக குறித்த பகுதிகளில் போதைப்பொருள் மாத்திரைகள் இரகசியமாக பிள்ளைகளுக்கு விநியோகிக்கப்படு கிறது.
இதன் விளைவு குறித்து பிள்ளை களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டுமெனவும், குறித்த பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்து வதன் மூலம் இந்தச் செயற்பாட்டை மட்டுப்படுத்தி உதவுமாறு பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை