மன்னாரில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிர்ப்புணர்வு ஊர்வலம்!

மகளிர் தினத்தை முன்னிட்டு விழிர்ப்புணர்வு ஊர்வலம் இன்று மன்னாரில் இடம் பெற்றது.


மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் , மன்னார் மாவட்ட வளர் பிறை பெண்கள் திட்ட பொறுப்பதிகாரி ரி.மேரி பிரியங்கா தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.

மன்னார் பொது மருத்துவமனைக்கு முன் ஆரம்பமான ஊர்வலம் முதன்மை வீதியூடாகச் சென்று மன்னார் பனங்கட்டுக்கொட்டு சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தைச் சென்றடைந்தது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

ஊர்வலத்தைத் தொடர்ந்து மன்னார் பனங்கட்டுக்கொட்டு சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நிகழ்வு இடம் பெற்றது.

நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் நகர உதவிப் பிரதேச செயலர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு , தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பெண்கள் திட்ட இணைப்பாளர் திருமதி லவினா , வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் , மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் பெனடிற் குரூஸ் மற்றும் மாதர் கிராம அமைப்புக்கள்,பெண்கள் அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.