சிற்றூழியர்களுக்கு வெற்றிடம் அதிகரிப்பு!
யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் நீண்டகாலம் பணியாற்றிய சிற்றூழியர்கள் 20பேர் அலுவலர்களாக பதவி உயர்வுடன் இடமாற்றம் பெற்றுச் செல்வதனால் சிற்றூழியர்களுக்கான வெற்றிடம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் நீண்ட காலமாக சிற்றூழியர்களாக பணியாற்றியவர்களில் நிரந்தர நியமனம் பெற்று 6 ஆண்டுகளின் பின்பு பதவி உயர்வுப் பரீட்சையில் தோற்றியவர்களில் 20பேர் சித்தி எய்தி எழுதுநராகப் பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றனர்.
இவர்கள் 20பேரும் எதிர்வரும் 2 ஆம் திகதி தொடக்கம் புதிதாக நியமிக்கப்படும் திணைக்களங்களில் தமது பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளனர்.
இதேநேரம் பதவி உயர்வு பெற்றுச் செல்வதனால் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செய லகங்களில் சிற்றூழியர்கள் வெற்றிடம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை