இலங்கை பங்களாதேஷ் இராணுவம் மகளீர் படையணி நிறுவுவதற்கு ஒத்துழைப்பு!

பங்களாதேச மக்கள் குடியரசின் பங்களாதேச இராணுவம் மகளீர் படையணி நிறுவுவதற்கு இலங்கை இராணுவம் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு வழங்குவதற்காக பங்களாதேச இராணுவ அதிகாரிகள் ஐவர் உள்ளடங்கிய குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். 
இராணுவ தலைமையகத்தில் கேர்ணல் எம்டி காயிருள் இஸ்லாம், கேர்ணல் பாசிர் அகமட், லெப்டினன்ட் கேர்ணல் எம்டி கம்ருசாமன்,மேஜர் முகமட் மாபுஷல் இஸ்லாம் மற்றும் மேஜர் மொசம்மத் சுல்தானா ரஷியா போன்ற அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை நேற்று சந்தித்தனர்.

மேலும் அவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்துடன் இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருன வன்னியாரச்சி , இலங்கை மகளீர் படையணி மற்றும் கொமாண்டோ படையணியின் கட்டளை தளபதிகளை சந்தித்தனர்.

இலங்கை இராணுவ தளபதியுடன் இடப்பெற்ற சந்திப்பின் போது பங்களாதேசத்தில் நிறுவுவதற்கு உள்ள மகளீர் படையணிக்கு தேவையான நித்திய கடமைகள், படையணி நிறுவுவது, உள்கட்டமைப்பு அபிவிருத்தி , நிர்வாக அமைப்பு மற்றும் மகளீர் படையணிக்கான தேவைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

பங்களாதேச இராணுவத்திற்கு மகளீர் படையணிக்கு சேர்த்து கொள்வதற்கான நடவடிக்கைகள் 2014 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. ஒரு தனி சக்தியாக பெண்கள் முக்கியத்துவம் பங்களாதேச பிரதிநிதிகள் வலியுறுத்திக் கூறப்பட்டன. பெண்கள் மூலம் நாட்டின் பணியாற்ற பங்களாதேச இராணுவம் சிறப்பு அலகுகள் மற்றும் துருப்புகளையும் மேலும் பெண்களுக்கு அவர்களை தேர்வு மேம்படுத்துவதன் மூலம் வளர்ச்சி பங்களிக்க முடியும் என்று கூறினார்.

மகளீர் படையணி நிறுவுவது தொடர்பாகவும் நீண்ட நாட்களாக ஆட்சேர்ப்பு தொடர்பாக சிறப்பான அறிக்கை மேற்கொண்டதாகவும், பெண்கள் பயிற்சி தொடர்பான மாதிரிகள் , யுத்த காலத்திலும் சமாதான சூழல்களிலும் வேலைவாய்ப்பு வழங்குதல், பொதுவாக நாளுக்கு சாதாரண தினசரி நடவடிக்கைகள் மற்றும் பதிவு செய்தல் தொடர்பாக கற்பித்தலுக்காக இராணுவ ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாக பங்களாதேச தூதுக்குழுவின் பிரதானி எம்டீ காயிருள் இஸ்லாம்இராணுவ தளபதிக்கு தெரிவித்தார்.

பங்களாதேச தூது குழு மகளீர் படையணி நிறுவுவது தொடர்பாக இல்லாமல் இவர்கள் யுத்த பூமியில் பெற்ற அனுபவம் மாற்றிக் கொள்வது தொடர்பாகவும் சுதந்திரம் பெற்றுக் பொண்டதன் பின்பு இருநாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் பங்களாதேச தூதுக்குழுக்களுக்கு இடையில் நினைவு சின்னங்கள் இதன்போது பரிமாறப்பட்டன.

பங்களாதேச தூதுக் குழு கடந்த திங்கட்கிழமை இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் செய்து , அங்கு 7 ஆவது இராணுவ மகளீர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் சதுரிகா போபுவலவினால் இலங்கை இராணுவ மகளீர் படையணியின் வரலாற்றிலே திட்டம், பயிற்சி, ஆட்சேர்ப்பு,வெற்றி, மனிதாபிமான நடவடிக்கை, மகளீர் படை வீராங்கனை முகங்கொடுக்கும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றன. 
இலங்கை மகளீர் படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் டட்லி வீரமன், இராணுவ பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருன வன்னியாரச்சி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இக்குழுவினர் கனேமுல்ல கொமாண்டோ படையணி மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் 7 ஆவது மகளீர் படையணிக்கும் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.